×

துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது

ஓசூர், மே 4: மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் (45). இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடியில் தங்கி உள்ளார். இவரது மனைவியுடன் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று முன்தினம், இருவரும் ஓசூர் நகர் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரகுமார்(24) என்பவர், லட்சுமணனின் மனைவியிடம் தகராறு செய்தார். இதை தட்டி கேட்ட லட்சுமணனை, சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து லட்சுமணன் கொடுத்த புகாரின் பேரில், ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி, ஈஸ்வரகுமாரை கைது செய்தனர்.

The post துப்புரவு ஊழியரை தாக்கிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Hosur ,Lakshmanan ,Maratha ,Hosur Andiwadi ,Krishnagiri District ,Hosur Nagar ,Dinakaran ,
× RELATED கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து...